லைஃப்ஸ்டைல்
கர்ப்பிணிகள் உடல் எடை அதிகரித்தால் உணவை குறைக்கலாமா?

கர்ப்பிணிகள் உடல் எடை அதிகரித்தால் உணவை குறைக்கலாமா?

Published On 2020-02-27 04:14 GMT   |   Update On 2020-02-27 04:14 GMT
கர்ப்பிணிகள் அளவுக்கு அதிகமாக எடை கூடிவிட்டது எனக் கருதி ஒருபோதும் உணவை குறைக்கவே கூடாது. குழந்தைப் பிறக்கும் வரை எடை அதிகரிப்பதில் எந்த பிரச்சனையும் கிடையாது.
பேறு காலத்தில், தாயின் உடல் எடை 12 முதல் 16 கிலோ வரை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். அதற்காக ஒவ்வொரு மாதமும் எவ்வளவு எடை அதிகரித்திருக்க வேண்டும் என்றும் வரையறுத்துக் கூறுவார்கள். துரித உணவுகளை அதிகம் உட்கொண்டால் உடல் எடை உடனடியாக அதிகரித்துவிடும். ஆனால், கர்ப்பிணிகளின் உடல் எடை அதிகரிப்பு என்பது குழந்தைகளின் நலன் காக்கும் கலோரிகளை அதிகரிப்பதாகும். எனவே நல்ல கலோரிகள் அதிகம் எடுத்துக்கொண்டு, உடல் எடையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

மேலும் சாப்பாட்டில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்பதால், உணவு சமைக்கும்போது குறைந்த அளவு உப்பு போட்டு சமைப்பது நல்லது. உப்பு இல்லாமல் சாப்பிடுவது சிரமமாக இருக்கும் என்பதால், உணவு எடுத்துக்கொள்வதை ஒரு நாளைக்கு ஆறு – ஏழு வேளைகளாகப் பிரித்துக்கொள்ளலாம். உடலுக்கு தேவையான கலோரிகளை நேரத்துக்குக் கொஞ்சமாக எடுத்துக்கொண்டால், தாய்க்கும் சிரமம் இருக்காது. குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்கும்.

கர்ப்பிணிகள் அளவுக்கு அதிகமாக எடை கூடிவிட்டது எனக் கருதி ஒருபோதும் உணவை குறைக்கவே கூடாது. குழந்தைப் பிறக்கும் வரை எடை அதிகரிப்பதில் எந்த பிரச்சனையும் கிடையாது.

தவிர்க்க வேண்டியவை…

மைதாவில் தயாரான உணவு பொருட்களை சாப்பிடவேக் கூடாது. மேலும் இனிப்பு , அரிசி ஆகியவற்றை சாப்பிடும் அளவை குறைத்துக்கொள்ளலாம். மது அருந்தும் பழக்கமுள்ள பெண்கள், முற்றிலுமாக கைவிடுவது நல்லது. அல்லது குழந்தை பிறக்கும் வரை இது மாதிரியான பழக்கம் கூடவே கூடாது. ஆல்கஹால், குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும்.

கருவில் உள்ள சிசுவின் உடல் எடையை அல்ட்ரா ஸ்கேன் வசதி மூலம் கண்டறிந்து விடலாம். துல்லியமாக தெரியாவிட்டாலும் ஏறத்தாழ உரிய எடை தெரிந்துவிடும். இதை வைத்துதான் மருத்துவர்கள் குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை அறிகிறார்கள். பேறு காலத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்று அல்லது நான்கு முறை குழந்தையின் உடல் எடையைக் கணக்கிட்டு அதற்கேற்ற உணவு மற்றும் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். மேலும் மாதம்தோறும் தாயின் எடையும் கணக்கிடப்படுகிறது.

வைட்டமின்கள், நார்ச்சத்து ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவதால் எந்த சிக்கலும் ஏற்படாது. ஆனால், புரதம் அதிக அளவில் எடுத்துக்கொள்வதால், குழந்தையின் உடல் எடை வெகுவாக அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். மேற்குறிப்பிட்ட உணவுப் பொருட்களில் புரதம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளாமல், தேவையான அளவுக்கு மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது.

எந்த சந்தேகத்துக்கும் மருத்துவரை அணுகி விளக்கம் கேட்டுத் தெளிவு பெறுவதில் தயக்கம் கூடவே கூடாது. தயக்கமின்றி நீங்கள் ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ளும் உணவுதான் குழந்தையின் எதிர்காலத்துக்கு அஸ்திவாரமாகப் போகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்..!
Tags:    

Similar News