லைஃப்ஸ்டைல்
வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Published On 2020-02-20 03:08 GMT   |   Update On 2020-02-20 03:08 GMT
நீங்கள் வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்ய நினைத்தால், அதற்கு சில விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
நீங்கள் வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்ய நினைத்தால், அதற்கு சில விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அவை பின் வருமாறு;

* கர்ப்ப பரிசோதனை அதிக அளவு உறுதி செய்து வெற்றி பெற, காலை எழுந்தவுடன் உங்களுக்கு வரும் முதல் சிறுநீரில் பரிசோதனை செய்ய வேண்டும். இது உங்களுக்குத் துல்லியமான தகவல்களைத் தரும்.

* சிறுநீர் தொற்று பிரச்சனைக்கு உடனடி தீர்வு!

* ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் கர்ப்ப பரிசோதனை கருவி பழுதடைந்து இருந்தாலோ அல்லது சேதம் அடைந்திருந்தாலோ, சரியான தகவலைத் தராது.

* ஒரு முறைக்கு இரண்டு அல்லது மூன்று முறை, அதாவது இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட நீங்கள் இந்த பரிசோதனையைச் செய்து உறுதிப் படுத்திக் கொள்ளலாம். சில சமயங்களில், இதில் மாற்றமும் ஏற்படலாம். அதனால் அவசரப்படாமல் நிதானமாக முடிவுக்கு வர முடியும்.

* மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுச் சரியான ஒரு வீட்டுப் பரிசோதனை முறையை நீங்கள் தேர்வு செய்யலாம். அப்படிச் செய்யும் போது உங்களுக்கு பெரும்பாலும் சரியான தகவலே கிடைக்க வாய்ப்பு உள்ளது.

* மேலும் நீங்கள் பயன்படுத்தும் கருவியை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி அறிய அதில் இருக்கும் குறிப்பைப் படித்துத் தெரிந்து கொண்டு பின் பயன் படுத்துவது நல்லது

* உங்களது முதல் பரிசோதனை நெகடிவாக வந்து விட்டால், பின் ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் முயற்சி செய்து பார்க்கவும்.

* சோதனைப் பட்டை (டெஸ்ட் ஸ்ட்ரிப்) என்பது பிரபலமான வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ள உதவும் கருவியாகும். இது எளிதாக அருகில் இருக்கும் மருந்து கடைகளில் கிடைக்கும்.
Tags:    

Similar News