லைஃப்ஸ்டைல்
பெண்களின் அந்தரங்க பகுதியில் ஏற்படும் ஆபத்தும் அதற்கான தீர்வும்…

பெண்களின் அந்தரங்க பகுதியில் ஏற்படும் ஆபத்தும் அதற்கான தீர்வும்…

Published On 2020-01-21 03:30 GMT   |   Update On 2020-01-21 03:30 GMT
பல விதமான நோய்களில் இருந்து தன்னை தானே காத்துக் கொள்ள பெண்கள் எப்போதும் எல்லா விஷயத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தூய்மை என்பது மனதை போல் உடலுக்கும் வேண்டும் என்பதை உணர்ந்து இன்றைய பெண்கள் நடந்துகொள்கின்றனர். அத்துடன் பல விதமான நோய்களில் இருந்து தன்னை தானே காத்துக் கொள்ள பெண்கள் எப்போதும் எல்லா விஷயத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மற்றும் இன்றைய பெண்கள் தெளிவாகவும் உள்ளனர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அந்த சுத்தப்படுத்தல் கூட விபரீதமாக அமைகிறது என்பதை பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

பெண்கள் அந்தரங்க பகுதியை பலர் சேவ் செய்வார்கள். இதனால் ஏற்பட்ட விபரீதத்தால் பெண் ஒருவர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி தற்போது மரணமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. வெறும் சேவிங் செய்தால் இப்படி நடக்க வாய்ப்பு உள்ளதா எனக்கேட்டால் உள்ளது.

அதாவது சேவிங் செய்யும் போது அந்தரங்க பகுதியில் வெட்டுப் பட்டால் இப்படி வைரஸ் தொற்றுக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதே போல் சிலர் சில கிரீம்கள் அந்தரங்க பகுதியில் போடுவார்கள். அது சில நேரங்களில் கர்ப்ப பை புற்றுநோய் வர காரணமாகிறதாம்.

இதற்கு சரியான தீர்வு நீங்கள் சேவிங் செய்த அடுத்த நொடியே மிதமான சுடு நீரில். மஞ்சள் தூள் சேர்த்து அந்தரங்க பகுதியை கழுவி விடுங்கள். இப்போது கிருமி தொற்று தடுக்கப்படுவதுடன் இருந்தாலும் இறந்து விடுகிறது.
Tags:    

Similar News