லைஃப்ஸ்டைல்
கர்ப்பிணிகளை பாதிப்பவை வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பாதிக்குமா?

கர்ப்பிணிகளை பாதிப்பவை வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பாதிக்குமா?

Published On 2019-11-30 06:33 GMT   |   Update On 2019-11-30 06:33 GMT
தாய்க்கு ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தையிடமும் மாற்றத்தை ஏற்படுத்தும். கர்ப்பிணிகளை பாதிக்கும் எந்த செயல்கள் குழந்தையை பாதிக்கும் என்று பார்க்கலாம்.
கர்ப்பகாலத்தில் பெண்கள் எடுத்து கொள்ளும் உணவே குழந்தைக்கும் உணவாக அமையும். குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிலிருந்து கிடைக்கின்றன. இதனால் குழந்தை கருவில் ஆரோக்கியமாக வளரும். அதே போல் தான் தாய்க்கு ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தையிடமும் மாற்றத்தை ஏற்படுத்தும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது போன்ற பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் உடனடியாக ஏற்படலாம் அல்லது குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும். கர்ப்பிணிகளை பாதிக்கும் எந்த செயல்கள் குழந்தையை பாதிக்கும் என்று பார்க்கலாம்.

1 எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் குடிப்பது நல்லது. அதிக நீர் குடிக்க வேண்டும். பிரிட்ஜில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

2 மழையில் நனையக் கூடாது. சூழ்நிலை காரணமாக நனைய நேரிட்டால், வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். தலையும் நன்கு உலர்த்தி காய வைத்து கொள்ள வேண்டும். ஈரத் தலையுடன் அதிக நேரம் இருக்க கூடாது.

3 கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது.. குளிர்ந்த காற்று, மழை பொழிவதற்கு முன் வீசும் காற்று மற்றும் பனிக்காற்று வீசும் இடங்களில் இருக்க கூடாது.

4 கர்ப்பிணி பெண்கள் சளிப் பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால், அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.

5 கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து குறைபாட்டிற்காக சத்து மாத்திரைகளை உபயோகித்தால், சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க துவங்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்தாலும், சிறிது காலத்திலேயே பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும்.

6 சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிப்பதை தவிர்த்து கீரைகள், பழங்கள், தானியங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். அவற்றை சாப்பிடுவது சிறந்தது.

7 அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் செரிக்க கூடிய உணவுகளை எடுத்து கொள்வது சிறந்தது.

8 மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இரவு நேரங்களில் கீரைகளை தவிர்க்க வேண்டும்.

9 அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து, மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. பழங்களாக சாப்பிட பிடிக்காதவர்கள் பழச்சாறுகளை அருந்தலாம்.

10 கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் ஓய்வெடுக்கலாம், ஆனால், தூங்கக் கூடாது.

11 அதிக சத்தமாக பேசும் போது குழந்தையிடம் அதிர்வுகள் ஏற்படும். மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கியமான குழந்தைக்கு வழிவகுக்கும்.

12 மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது.

Tags:    

Similar News