லைஃப்ஸ்டைல்

செக்ஸ் உறவு பற்றி கணவரை விட தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்

Published On 2017-06-24 06:52 GMT   |   Update On 2017-06-24 06:52 GMT
பெண்கள் தங்களது அந்தரங்க உறவு குறித்த தகவல்களை தங்கள் கணவரை விட அதிகமாக தன் தோழிகளிடமே பகிர்ந்து கொள்கின்றனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.
பொதுவாக ஒரு தகவல் என்றால் தங்களது துணையிடம் விவாதித்து அது பற்றிய விவரங்களை பரிமாறி கொள்வது வழக்கமான ஒன்றாக இருக்கும்.

ஆனால் பெண்கள் இந்த விசயத்தில் அப்படியே வேறுபடுகின்றனர். இது பற்றி ஆய்வு முடிவு வெளியிட்டுள்ள முடிவில், மற்ற பெண்களுடன் இருக்கும்போதுதான் தங்கள் அந்தரங்க விசயங்களை பெண்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.

தங்களது தோழிகளுடன் இரவு வெளியே செல்லும்போது அவர்களிடம் பல விசயங்களை பகிர்ந்து கொள்வதுடன் அதிகமான அந்தரங்கம் பற்றிய தகவல்களை ஆர்வமுடன் பேசுகின்றனர்.



இவ்வகையை சேர்ந்த பெண்கள் 35 சதவீதத்தினர் உள்ளனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. ஆனால், 15 சதவீத பெண்களே தங்கள் கணவருடன் இரவு நேரத்தில் வெளியே செல்லும்போது அந்தரங்கம் தொடர்பான பேச்சை தொடங்குகின்றனர்.

இதில் பெரும்பாலும் திருமணம் பற்றிய பேச்சு தவிர்க்கப்படுகிறது. பொதுவாக பெண்கள் தங்கள் தோழிகளிடம் ஒன்றாக சேர்ந்து விட்டால் அவர்கள் பல விசயங்களையும் அலச ஆரம்பித்து விடுவார்கள்.

அந்த வரிசையின்படி பார்த்தால் பெண்களின் பேச்சில் முதல் இடம் வகிப்பது ஆண்கள் குறித்த பேச்சுதான். அவர்களில் 64 சதவீதத்தினர் தங்களது கணவர்களை குறித்து பேசுவதாக தெரிவித்துள்ளனர்.



மேலும், அதில் சிலபேர் மற்றவர்களின் உறவுமுறைகளை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வதாகவும் கூறியுள்ளனர். குறிப்பாக பெண்கள் இரவு நேரங்களில் தோழிகளுடன் வெளியே செல்வதற்காக அதிகமான முயற்சிகளை மேற்கொள்வர்.

தங்களை அழகுபடுத்தி கொள்வதற்காக பெண்கள் குறைந்தது 50 நிமிடங்களாவது எடுத்துக்கொள்கின்றனர். அதில் 10 சதவீதத்தினர் மெல்லிய உள்ளாடைகளை அணிந்து கொள்கின்றனர் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

பெண்கள் இரவு பொழுதை தங்களின் நெருங்கிய நண்பர்களுடன் மிக மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர். மிக சிறப்புடன் பொழுதை கழிப்பதற்கு தேவையான அனைத்து விசயங்களிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
Tags:    

Similar News