லைஃப்ஸ்டைல்

கருப்பையை இயற்கை முறையில் சுத்தம் செய்வது எப்படி?

Published On 2017-05-17 09:11 GMT   |   Update On 2017-05-17 09:11 GMT
கருசிதைவிற்கு பின் நமது கருப்பையை சுத்தம் செய்வது மிகவும் அவசியமாகும். இயற்கை முறையில் கருப்பையை சுத்தம் செய்வது எப்படி தெரிந்து கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் சிலருக்கு, கருமுட்டை கோளாறு காரணமாக சில நேரத்தில் தானாகவே கரு கலைந்து கருச்சிதைவு ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் போது, கருசிதைவிற்கு பின் நமது கருப்பையை சுத்தம் செய்வது மிகவும் அவசியமாகும். எனவே கருச்சிதைவு ஏற்பட்ட பின் இயற்கை முறையில் கருப்பையை சுத்தம் செய்வதற்கு சூப்பரான டிப்ஸ் இதோ!

கருச்சிதைவு ஏற்பட்ட கருப்பையை சுத்தம் செய்வது எப்படி?

பிரண்டை மற்றும் குறிஞ்சா வேரை சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து, வயிற்றின் மீது தடவி வந்தால், வயிற்றில் இறந்த நிலையில் இருக்கும் சிசு வெளியில் வந்து விடும்.

கறிவேப்பிலை, முருங்கை இலை, வேப்பிலை மற்றும் கடுக்காய் ஆகிய அனைத்தையும் சமஅளவு எடுத்து, அதனுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து, அதை நன்றாக காய்ச்சி, குடித்து வர வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால், நமது வயிற்றில் உள்ள கிருமிகள், அழுக்குகள் அனைத்தும் அழிக்கப்பட்டு, கர்ப்பப்பை சுத்தமடையும்.
Tags:    

Similar News