லைஃப்ஸ்டைல்

கட்டிலில் ஆண்கள் செய்யும் தவறுகள்

Published On 2016-09-06 07:13 GMT   |   Update On 2016-09-06 07:13 GMT
கட்டிலில் ஆண்கள் செய்யும் சில தவறுகள் மனைவியின் மனதை பாதிக்கும். அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.
தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம். இது, தெரியாமல் நடக்கும் தவாற இருந்தாலும் சரி, உணர்ச்சியின் உச்சத்தில் அறிந்தே செய்தாலும் சரி, இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

உடல் ரீதியாக மட்டுமின்றி, மனம் ரீதியாகவும் சில செயல்கள் பெண்களை தர்மசங்கடமாக உணர வைக்கும். எனவே, முடிந்த வரை தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது, இந்த ஒன்பது தவறுகள் ஏற்படாதவாறு ஆண்கள் நடந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது, செக்ஸ் வைத்துக் கொள்வதில் மட்டுமே ஈடுபாடு, நாட்டம் செலுத்துவது தவறு. சில ஆண்கள், தாம்பத்தியத்தில் மட்டும் நாட்டம் செலுத்தி, ஏனைய முத்தமிடுதல், கட்டி தழுவுதல் போன்றவற்றில் கோட்டைவிடுவது தவறு. முழுமையான இன்பம் அடையாமல் இருப்பதற்கு இதுவும் ஓர் காரணமாகும்.

உங்கள் துணை ஆயத்தம் ஆவதற்கு முன்னரே நீங்கள், தாம்பத்தியத்தில் ஈடுபட முயல்வது அவர்களது அசௌகர்யமான உணர்வை அளிக்கலாம். எனவே, பொறுமையாக செயலபட வேண்டியது அவசியம்.

துணை என்பதையும் தாண்டி பேசுவதை, தவிர்த்து, உணர்வுகளை பரிமாறிக் கொள்வதை தவிர்த்து, வெறுமென உறவில் மட்டும் ஈடுபடுவது தவறு.

மிக வேகமாக உச்சம் காண்பதும், மிக தாமதமாக உச்சம் காண்பதும் என இரண்டும் உறவின் இன்பத்தை குறைக்கலாம். எனவே, உறவில் ஈடுபடும் போது முடிவை சரியான நேரத்தில் முடிக்க வேண்டியது அவசியம். இல்லையேல், இருவருக்குமே கூட அலுப்பு நேரிட வாயப்புகள் உண்டு.

ஏதோ, ஆபாசப்படத்தில் ஈடுபடுவது போன்று, உங்கள் துணையிடம் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய தவறு.

உறவில் ஈடுபட்டு முடித்த பிறகு அமைதியாக இருப்பது தவறு. பெண்களுக்கு உறவில் ஈடுபட்ட பிறகு, பேசுதல், கொஞ்சுதல் தான் உச்சம் அடைய வைக்கும். இதை தவிர்ப்பது தவறு.

மெஷின் போல, உணர்வின்றி தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் அல்லது வெறும் செக்ஸ்சுக்காக மட்டும் துணையை பயன்படுத்திக் கொள்வது மிகப்பெரிய தவறு. இதுவே உறவில் விரிசல் ஏற்பட முக்கிய காரணமாக அமையும்.

Similar News