பெண்கள் உலகம்

மாதவிடாய் காலத்தில் செய்ய வேண்டியவை

Published On 2023-11-21 03:30 GMT   |   Update On 2023-11-21 03:30 GMT
  • போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.
  • துரித உணவுகளையும் ஒதுக்கிவிட வேண்டும்.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே மாதவிடாய் அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். தலைவலி, மூட்டு வலி, முதுகு வலி, கை-கால் வலி போன்ற பாதிப்புகள் எட்டிப்பார்க்கும். உடலில் ஒருவித சோர்வும் குடிகொள்ளும். சிலருக்கு முகப்பருக்கள் வெளிப்பட தொடங்கும். திடீர் கோபம், எரிச்சல், கவனக்குறைவு, மன அழுத்தம் ஏற்படக்கூடும். தூக்கமும் தடைபடும். இதுபோன்ற அறிகுறிகள் எட்டிப்பார்க்கும்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* உணவு விஷயத்தில் கட்டுப்பாடுகளை பின்பற்ற தொடங்கிவிட்டாலே சுமூகமாக சமாளித்து விடலாம். அதிலும் வயிறு தொடர்பான பிரச்சினைகளில் இருந்து விடுபட கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது அவசியம். உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். அதுபோல் உப்பு அதிகம் சேர்க்கப்படும் ஊறுகாய், காரமான மசாலா பொருட்களை தவிர்க்க வேண்டும். எண்ணெய் பலகாரங்கள், நொறுக்குத்தீனிகள், துரித உணவுகளையும் ஒதுக்கிவிட வேண்டும்.

* மாதவிடாய் சமயங்களில் மூன்று வேளை சாப்பிடுவதற்கு பதிலாக உணவை பிரித்து நான்கு அல்லது ஐந்து வேளையாக சாப்பிடலாம்.

* இஞ்சி டீ பருகுவது வலியை கட்டுப்படுத்த உதவும். ஊட்டச்சத்துமிக்க காய்கறிகள், முழு தானியங்கள், கீரைகள், பழங்களை சாப்பிட வேண்டும். மதிய உணவில் முட்டை சேர்த்துக்கொள்ளலாம்.

* மாதவிடாய் சமயத்தில் புராக்கோலி, தக்காளி, சோளம், ஆரஞ்சு பழம், வேர்க்கடலை போன்றவைகளை சாப்பிடுவதும் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும்.

* வாழைப்பழங்கள், வெண்ணெய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவற்றில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அவைகளை சாப்பிடுவது மனநிலையை தெளிவாக்கும். குடல் இயக்கத்திற்கும் நன்மை சேர்க்கும்.

* போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். மூச்சுப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவைகளையும் செய்து வரலாம்.

Tags:    

Similar News