அழகுக் குறிப்புகள்

தினமும் கூந்தலை சீவ வேண்டுமா?

Published On 2022-12-21 12:27 IST   |   Update On 2022-12-21 12:27:00 IST
  • தலைமுடியை தினமும் சீவுவது முடியை பளபளப்பாக வைக்க உதவும்.
  • தலைமுடி ஆரோக்கியமாக இருக்க உதவும்.

தினமும் பல் துவக்குவது, குளிப்பது போன்று தலைமுடியையும் தவறாமல் சீவுவது அவசியம் மற்றும் முக்கியம் என்பது தெரியுமா?

காலை ஒருமுறை, இரவு தூங்கும் முன் ஒருமுறை என சராசரியாக நாளொன்றுக்கு 2 முறை தலைமுடியை முறையாக சீவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

தினம் சீப்பை வைத்து தலைமுடியை சீவினால் அது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை ஊக்குவித்து முடி வேர்களை பலமாக்கும்.

உச்சந்தலையில் காணப்படும் செபாசியஸ் சுரப்பிகள் sebum-த்தை உற்பத்தி செய்கின்றன. இயற்கையாகவே முடியை நிலைநிறுத்தி பாதுகாக்க இந்த sebum உதவுகிறது. தினமும் 2 முறை அல்லது அதற்கு மேல் தலை சீவும் போது செபாசியஸ் சுரப்பிகள் தூண்டப்பட்டு சருமத்தில் இருந்து முடியின் வேர் வரை இயற்கை எண்ணெய்கள் சரியாக செல்வது உறுதி செய்யப்படுகிறது.

தலைமுடியை தினமும் சீவுவது முடியை பளபளப்பாக வைக்க உதவும்.

தினமும் தவறாமல் தலை சீவி வருவது பழைய முடி, இறந்த சரும செல்கள், ஹேர் ப்ராடக்டின் மிச்சங்கள், அழுக்கு, முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள மற்ற படிந்துள்ள தேவையற்றவற்றை சுத்தம் செய்ய உதவுகிறது.

அவ்வப்போது தலைமுடியை சீவினால் அது முடியின் அளவை அதிகரிக்கவும், தலைமுடி ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க உதவி புரிகின்றது. 

Tags:    

Similar News