லைஃப்ஸ்டைல்
அடிக்கடி முகம் கழுவினால்

அடிக்கடி முகம் கழுவினால் என்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?

Published On 2021-04-24 08:29 GMT   |   Update On 2021-04-24 08:29 GMT
தினமும் மூன்று முறைக்கு மேல் முகம் கழுவுவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் குறிப்பிடுகிறார்கள். முகத்தை சுத்தம் செய்யும் ஒவ்வொரு முறையும் பேஸ் வாஷ் கிரீம் பயன்படுத்துவது நல்லதல்ல.
‘‘அடிக்கடி முகம் கழுவுவது நல்லதல்ல’’ என்கிறார்கள் சரும நோய் மருத்துவர்கள். சருமம் எண்ணெய்த்தன்மை கொண்டதாக இருந்தால் தினமும் மூன்று முறைக்கு மேல் முகம் கழுவுவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் குறிப்பிடுகிறார்கள். காலையில் எழுந்ததும் பற்களை சுத்தம் செய்த பிறகு முகத்தை தண்ணீரில் கழுவுவது வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. அது அவசியமானது. சரும துளைகளை சுத்தம் செய்து புத்துணர்ச்சியை கொடுக்கும்.

எண்ணெய் மயமான சருமத்தை கொண்டவர்கள் பிற்பகலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். அது புத்துணர்வை கொடுக்கும். மேலும் முகத்தில் இருக்கும் கூடுதல் எண்ணெய்பசையை நீக்கவும் உதவும். வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியதும் முகத்தை கழுவ வேண்டியதும் அவசியம். அது சோர்வை நீக்கி முகத்தில் உள்ள அழுக்குகளை போக்கும்.

முகத்தை சுத்தம் செய்யும் ஒவ்வொரு முறையும் பேஸ் வாஷ் கிரீம் பயன்படுத்துவது நல்லதல்ல. அதில் இருக்கும் ரசாயன பொருட்கள் சருமத்தின் மென்மையையும், இயற்கையான பளபளப்பையும் நீக்கிவிடும். முகம் எண்ணெய் பசைமிக்கதாக இருந்தால் டோனர் பயன்படுத்தி முகத்தை கழுவலாம். சென்சிட்டிவ்வான சருமமாக இருந்தால் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சோப்பையும் பயன்படுத்தலாம். முகத்தை அதிக நேரம் கழுவவோ, துடைக்கவோ கூடாது.
Tags:    

Similar News