லைஃப்ஸ்டைல்
தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு

தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு

Published On 2021-07-19 08:59 GMT   |   Update On 2021-07-19 08:59 GMT
தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு. இந்த குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோழி இறைச்சி - அரை கிலோ
தக்காளி - 3 (நறுக்கவும்)
சி.வெங்காயம் - அரை கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)
காய்ந்த மிளகாய் - 2 (நறுக்கவும்)
சிக்கன் மசாலா தூள் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள், கடுகு - சிறிதளவு
தேங்காய்ப்பால் - அரை டம்ளர்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

கோழி இறைச்சியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

அதனுடன் கோழி இறைச்சி துண்டுகளை சேர்த்து கிளறவும்.

பின்னர் சிக்கன் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும்.

ஓரளவு வெந்ததும் தேங்காய்ப்பாலை ஊற்றி கிளறி மீண்டும் மூடி வைக்கவும்.

தேங்காய் பால் நன்கு வற்றி குழம்பு பதத்துக்கு வந்ததும் இறக்கி பரிமாறலாம்.

சூப்பரான தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு ரெடி.
Tags:    

Similar News