லைஃப்ஸ்டைல்
பிரெட் பீட்சா

வீட்டிலேயே 10 நிமிடத்தில் செய்யலாம் பிரெட் பீட்சா

Published On 2021-03-23 09:44 GMT   |   Update On 2021-03-23 09:44 GMT
புதுமையான உணவுகளை அதிகம் விரும்பும் குழந்தைகளுக்கு எப்போதாவது சிலவகை புதுமையான உணவுகளை நாமே தயார் செய்து கொடுக்கலாம். அந்த வகையில் இன்று பிரெட் பீட்சா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

சாண்ட்விச் பிரெட் - 4 துண்டுகள்
தக்காளி நறுக்கியது - கால் கப்
வெங்காயம் நறுக்கியது - கால் கப்
குடைமிளகாய் - கால் கப்
பன்னீர் துருவியது - கால் கப்
சீஸ் துருவியது - கால் கப்
கொத்தமல்லி தழை நறுக்கியது - ஒரு கைப்பிடி
உப்பு - தேவைக்கு
மிளகாய் அல்லது மிளகு தூள் - அரை தேக்கரண்டி

செய்முறை

தவாவை சூடாக்கி சிறிது எண்ணெய் தடவி கொள்ள வேண்டும். அடுப்பை சிறுதீயில் வைக்க வேண்டும்.

பிரெட் துண்டுகளை தவாவில் வைத்து அவற்றின் மேல் நறுக்கிய காய்கறிகளை பரவலாக வைக்க வேண்டும்.

பின் அதன் மேல் துருவிய பன்னீர் மற்றுத் துருவிய சீஸ்ஸை தாராளமாக தூவ வேண்டும்.

அதற்கு மேல் தேவையான உப்பு, மிளகுத்தூள் தூவி மிதமான தீயில் வேக விட வேண்டும்.

இப்போது காய்கறிகள் தேவையான அளவு வெந்து சீஸ் நன்றாக உருக ஆரம்பித்து காய்கறிகள் மேல் பரவ ஆரம்பிக்கும்.

உருகிய சீஸ் காய்கறிகளின் மேல் சீராக பரவும் அதே நேரம் நல்ல நறுமணமும் வர ஆரம்பிக்கும்.

இந்த தருணத்தில் அடுப்பில் இருந்து எடுத்து பரிமாறுங்கள்.

குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் இந்த பிரெட் பீட்சாவை ருசித்து சாப்பிடுவார்கள்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News