லைஃப்ஸ்டைல்
செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்

செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்

Published On 2020-11-27 09:41 GMT   |   Update On 2020-11-27 09:41 GMT
எலும்பு சாம்பார் ஒரு செட்டிநாடு அசைவ உணவு, ஆட்டு நெஞ்சு எலும்பில் செய்வார்கள். நெஞ்சு எலும்பும், முருங்கைக்காயும் சேர்த்து சமைக்கும்போது, வீடே மணக்கும்.
தேவையான பொருட்கள்:

எலும்பு   - 250 கி
முருங்கைக்காய் – 1
து.பருப்பு – 50 கி
வெங்காயம்– 1
இஞ்சி – பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
தக்காளி – 2
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் –  4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
புளித் தண்ணீர் – 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

அரைத்துக் கொள்ள:

தேங்காய் – 2 மேசைக்கரண்டி
கசகசா  - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி

தாளிக்க:

பிரியாணி இலை – 1
பட்டை - சிறிய துண்டு
கல் பாசி – சிறிது
சோம்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்   - 2
கறிவேப்பிலை – 1  கொத்து
நல்லெண்ணெய்  – 2 மேசைக்கரண்டி

செய்முறை:

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முருங்கைக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

எலும்பை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு து.பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து  3 விசில் விட்டு 5 நிமிடங்கள் சிம்மில் வேக வைக்கவும். 

கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொரிய விடவும். 

பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 

பின் , தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்கவும். 

பிறகு, குக்கரில் உள்ள பொருட்களைச் சேர்க்கவும். 

பின்  மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து , முருங்கைக்காய், தேவையான உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்க வைக்கவும்.

புளித் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுதைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

சுவையான, மணம் மிகுந்த செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார் சாப்பிட தயார்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News