லைஃப்ஸ்டைல்
குடைமிளகாய் சாம்பார்

இட்லிக்கு அருமையான குடைமிளகாய் சாம்பார்

Published On 2020-11-23 09:31 GMT   |   Update On 2020-11-23 09:31 GMT
இட்லி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் குடைமிளகாய் சாம்பார். இன்று இந்த சாம்பாரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

குடைமிளகாய் - 2
சாம்பார் பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம், தக்காளி - தலா 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
புலி பேஸ்ட் - 1/4 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1/2 கப்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 5
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

துவரம் பருப்பு நன்றாக வேகவைத்து  கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒன்றரை கப் தண்ணீரில் புளி, சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

அடுத்து அதில் குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி, சாம்பார் பொடி கரைசலை ஊற்றி பொடி வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

அடுத்து வேகவைத்த துவரம் பருப்பை அத்துடன் சேர்த்து அதற்கு தேவையான உப்பு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விடவும்.

இறுதியாக கொத்தமல்லி சேர்த்து 1 டீஸ்பூன் நெய் சேர்க்க சுவை மற்றும் வாசனை அதிகரிக்கும்.

சூப்பரான குடைமிளகாய் சாம்பார் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News