லைஃப்ஸ்டைல்
உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் அடிக்கடி மரவள்ளிக்கிழங்கு பாதாம் கீர் பருகலாம். இந்த கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மரவள்ளிக்கிழங்கு - 200 கிராம்
முந்திரி - 20
பாதாம் - 25
பிஸ்தா - 8
ஏலக்காய் - 3
ஐஸ் கட்டிகள் - 5
சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை:
பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து துருவிக்கொள்ளவும்.
பாதாம், முந்திரியை ஊறவைத்து கொள்ளவும்.
மிக்ஸியில் ஏலக்காய், ஊறவைத்த முந்திரி, பாதாம், துருவிய மரவள்ளிக்கிழங்கு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
அடுத்து அதில் சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து ஒரு திருப்புத் திருப்பவும்.
பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
கீர் பரிமாறும் டம்ளரில் ஊற்றி மேலே பிஸ்தா தூவி பரிமாறவும்.
மரவள்ளிக்கிழங்கு - 200 கிராம்
முந்திரி - 20
பாதாம் - 25
பிஸ்தா - 8
ஏலக்காய் - 3
ஐஸ் கட்டிகள் - 5
சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை:
பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து துருவிக்கொள்ளவும்.
பாதாம், முந்திரியை ஊறவைத்து கொள்ளவும்.
மிக்ஸியில் ஏலக்காய், ஊறவைத்த முந்திரி, பாதாம், துருவிய மரவள்ளிக்கிழங்கு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
அடுத்து அதில் சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து ஒரு திருப்புத் திருப்பவும்.
பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
கீர் பரிமாறும் டம்ளரில் ஊற்றி மேலே பிஸ்தா தூவி பரிமாறவும்.
சூப்பரான மரவள்ளிக்கிழங்கு பாதாம் கீர் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.