லைஃப்ஸ்டைல்
மரவள்ளிக்கிழங்கு பருப்பு வடை

மரவள்ளிக்கிழங்கு பருப்பு வடை

Published On 2020-04-03 10:26 GMT   |   Update On 2020-04-03 10:26 GMT
மாலை நேரத்தில் டீ, காபியுடன் சூடாக சாப்பிட அருமையாக இருக்கும் மரவள்ளிக்கிழங்கு பருப்பு வடை. இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மரவள்ளிக்கிழங்கு - 200 கிராம்
ஊறவைத்த கடலைப்பருப்பு - 150 கிராம்
பச்சரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 1
பச்சை மிளகாய் - 5
காய்ந்த மிளகாய் - 4
புதினா - ஒரு கைப்பிடி அளவு
வெங்காயம் - 100 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:


மரவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

புதினா, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

ஊறவைத்த பருப்புடன் இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

பின்பு அதில் துருவிய மரவள்ளிக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், புதினா, அரிசி மாவு சேர்த்துப் பிசையவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவைச் சிறு சிறு வடைகளாகத் தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மரவள்ளிக்கிழங்கு மசால் பருப்பு வடை தயார்.

குச்சிக்கிழங்கு, குச்சிவள்ளிக்கிழங்கு, மரச்சினிக்கிழங்கு என்றும் மரவள்ளிக்கிழங்கு அழைக்கப்படுகிறது.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News