லைஃப்ஸ்டைல்
திருநெல்வேலி சொதி

இடியாப்பத்திற்கு அருமையான திருநெல்வேலி சொதி

Published On 2020-03-30 10:43 GMT   |   Update On 2020-03-30 10:43 GMT
சூடான சாதம், தோசை, இடியாப்பத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த திருநெல்வேலி சொதி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு - 100 கிராம்
நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு - 1 கப்
முருங்கைக்காய் - 1
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்
தேங்காய் துருவல் - 1 கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 5
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
நெய், எண்ணெய், உப்பு - தேவைக்கு



செய்முறை:

தேங்காய் துருவலை மிக்சியில் அரைத்து இரண்டு தடவையாக பால் எடுத்துக்கொள்ளவும்.

வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, காய்கறிகள், முருங்கைக்காய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாசிப்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

அதனுடன் இரண்டாவதாக எடுத்த தேங்காய் பாலை ஊற்றவும்.

அடுத்து அதில் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் போன்ற காய்கறிகளையும் சேர்த்து வேகவைக்கவும்.

நன்கு வெந்ததும் பாசிப்பருப்பை கொட்டி கொதிக்கவிடவும்.

கொதித்து வந்ததும் முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்து நுரை பொங்கி வந்ததும் இறக்கியதும் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலக்கவும்.

பின்னர் தனியாக வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பரிமாறவும்.

இதனை புதிதாக திருமணமான மாப்பிள்ளைக்கு விருந்துடன் சேர்த்து பரிமாறுவார்கள். சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News