லைஃப்ஸ்டைல்
பருத்திக்கொட்டை கோதுமை இனிப்பு பூரி

பருத்திக்கொட்டை கோதுமை இனிப்பு பூரி

Published On 2020-03-16 08:34 GMT   |   Update On 2020-03-16 08:34 GMT
குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பருத்திக்கொட்டை, இனிப்பு சேர்த்து பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பருத்திக் கொட்டை - 1 கப்
கோதுமை மாவு - 2 கப்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
எண்ணெய் ‌‌ - தேவைக்கேற்ப
தண்ணீர் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப



செய்முறை:


பருத்திக் கொட்டையை முதல் நாள் இரவே ஊறவைத்து கொள்ள வேண்டும்.

ஊறவைத்த பருத்திக் கொட்டையை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கிண்ணத்தில் பருத்திக்கொட்டை விழுது, உப்பு, கோதுமை மாவு, ஏலக்காய் தூள் மற்றும் பொடித்த வெல்லம், தண்ணீர் சேர்த்து இவை அனைத்தையும் பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

மாவை வட்ட வடிவில் தேய்த்து கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த பூரியை ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுத்தால் சூடான சுவையான பருத்திக்கொட்டை கோதுமை இனிப்பு பூரி தயார்.

B. இந்துமதி 

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News