லைஃப்ஸ்டைல்
பனங்கிழங்கு பாயாசம்

தித்திக்கும் பனங்கிழங்கு பாயாசம்

Published On 2020-02-24 08:31 GMT   |   Update On 2020-02-24 08:31 GMT
எப்பொழுதும் ஒரே மாதிரி இனிப்பு பலகாரம் செய்து சலிப்படைந்திருக்கும். இன்று பனங்கிழங்கு வைத்து பாயாசம் செய்யலாம். இதை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி உண்பார்கள்.
தேவையான பொருட்கள் :

பனங்கிழங்கு - 4
தேங்காய்ப்பால் - ஒரு கப்
பனை வெல்லக் கரைசல் - அரை கப்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - தேவையான அளவு
நெய் - ஒரு ஸ்பூன்.



செய்முறை:

பனங்கிழங்கை முழுதாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் வெளியில் உள்ள தோல் பகுதியையும், உள்ளே உள்ள தண்டு பகுதியையும் நீக்கி விட வேண்டும்.  இதனை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் நெய்யை சேர்த்து சூடானதும் பனங்கிழங்கு விழுதை சேர்த்து அடிபிடிக்காதவாறு 3 நிமிடம் வரை அடுப்பை சிம்மில் வைத்து வதக்க வேண்டும்.

அதனுடன் பனை வெல்லக் கரைசல் சேர்த்து, கொதித்து வரும் போது இறக்கிக் கொள்ளலாம்.

கொஞ்சம் சூடு தணிந்த பின்பு தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து கலக்கி பரிமாறவும்.

தித்திப்பான பனங்கிழங்கு பாயாசம் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News