லைஃப்ஸ்டைல்
கேழ்வரகு முருங்கைக்கீரை பக்கோடா

கேழ்வரகு முருங்கைக்கீரை பக்கோடா

Published On 2019-10-24 08:31 GMT   |   Update On 2019-10-24 08:31 GMT
மாலையில் டீ, காபியுடன் சாப்பிட கேழ்வரகு முருங்கைக்கீரை பக்கோடா அருமையாக இருக்கும். இன்று இந்த பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 1 கப்,
வேர்க்கடலை - 1/4 கப்,
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
முருங்கைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை - தலா 1 கைப்பிடி,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை :

முருங்கைக்கீரை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, வேர்க்கடலை, மிளகாய்த்தூள், உப்பு, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கலந்த மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக பக்கோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் மாவை எடுத்து பக்கோடாவாக கிள்ளி போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

சூப்பரான ஸ்நாக்ஸ் கேழ்வரகு முருங்கைக்கீரை பக்கோடா ரெடி

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News