லைஃப்ஸ்டைல்
தேங்காய் பூரண கொழுக்கட்டை

தேங்காய் பூரண கொழுக்கட்டை

Published On 2019-08-31 08:31 GMT   |   Update On 2019-08-31 08:31 GMT
விநாயகர் சதுர்த்திக்கு பல வகையான கொழுக்கட்டைகள் செய்தாலும் தேங்காய் பூரண கொழுக்கட்டை என்றால் பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பச்சரிசி மாவு - 1 கப்
தேங்காய் -1 மூடி
வெல்லம் - 150 கிராம்
ஏலக்காய் - 5
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப



செய்முறை :

மாவை பச்சரிசியை களைந்து நீர் வடித்து பின் ஒரு மணி நேரம் மூடி வைத்திருந்து பின் மிக்ஸியில் நைஸாக மாவாக அரைக்கவும்.

மாவு எத்தனை கப் உள்ளதோ அந்த அளவு தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, நிதானமான தீயில் மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகளின்றி கிளறி இறக்கி ஆறிய பின் கையினால் அழுத்தி பிசைய வேண்டும். எல்லா வகை பூர்ணம் கொழுக்கட்டைகளுக்கும் மாவு தயாரிக்கும் விதம் இதுதான்.

கொதி நீரில் கரைத்து வடிகட்டிய வெல்ல நீருடன் தேங்காய் பூ சேர்த்து கிளறி ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் வற்றி வரும் போது இறக்கவும்.

மாவை வாழையிலையில் தட்டி நடுவில் பூர்ணம் வைத்து கிண்ணம் போல் குவித்து மூட வேண்டும்.

இட்லித்தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்க எடுக்க வேண்டும்.

சூப்பரான தேங்காய் பூரண கொழுக்கட்டை ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News