லைஃப்ஸ்டைல்
காரா சேவ்

வீட்டிலேயே செய்யலாம் காரா சேவ்

Published On 2019-08-30 08:32 GMT   |   Update On 2019-08-30 08:32 GMT
மாலைநேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் காரா சேவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கடலை மாவு - 200 கிராம்,
பச்சரிசி மாவு - 50 கிராம்,
மிளகுத்தூள் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
ஓமம் - சிறிதளவு,
எண்ணெய் - கால் கிலோ,
சமையல் சோடா - ஒரு சிட்டிகை.



செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு, ஓமம், 2 டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நீர்விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

எண்ணெயைச் சூடாக்கி, மாவை காராசேவ் கரண்டியில் போட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, பொரித்து எடுக்கவும்.

சூப்பரான காரா சேவ் ரெடி.

இதன் கலர் சிவக்காது மஞ்சளாகத்தான் இருக்கும். மிளகாய்த்தூள் சேர்த்தால் காராசேவ் சிவக்கும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News