லைஃப்ஸ்டைல்
மட்டன் நெஞ்செலும்பு சூப்

மட்டன் நெஞ்செலும்பு சூப்

Published On 2019-08-09 04:55 GMT   |   Update On 2019-08-09 04:55 GMT
காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு மட்டன் நெஞ்செலும்பு சூப் செய்து கொடுத்தால் உடலுக்கு வலிமை கிடைக்கும். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

நெஞ்செலும்பு - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
சீரகம், மிளகு - சிறிது
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு - சிறிது
எண்ணெய் - 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
மஞ்சள்பொடி - சிறிது

தாளிக்க :


இஞ்சி, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை.



செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மட்டன் நெஞ்செலும்பை நன்றாக கழுவி வைக்கவும்.

இஞ்சி, பெருஞ்சீரகத்தை ஒன்றுபாதியாக தட்டி வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் காயவைத்து அதில் மிளகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சேர்த்து நன்றாக வதக்கவும்.

தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் மட்டன் நெஞ்செலும்பை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

அடுத்து அதில் உப்பு, மஞ்சள் பொடி போட்டு 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி 6 விசில் போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும்.

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள இஞ்சி, பெருஞ்சீரகத்தை போட்டு தாளித்து சூப்பில் கொட்டி 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

சத்தான மட்டன் நெஞ்செலும்பு சூப் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News