லைஃப்ஸ்டைல்

ரவா புட்டு செய்வது எப்படி?

Published On 2018-07-30 06:04 GMT   |   Update On 2018-07-30 06:04 GMT
பல்வேறு வகையான புட்டு சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ரவையில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த முறை செய்வது மிகவும் எளிமையானது.
தேவையான பொருள்கள் :

ரவை - 250 கிராம்
சர்க்கரை - 1 கப்
தேங்காய் - அரை மூடி ,
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 1 ஸ்பூன்



செய்முறை :

தேங்காயை துருவிக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ரவையை போட்டு உதிர் உதிராக வாசனை வரும்வரை வறுக்கவும்.

வறுத்த ரவை ஆறியதும் தண்ணீரில் உப்பு சேர்த்து தெளித்து பிசிறிக் கொள்ளவும்.

இத்துடன் சர்க்கரை, துருவிய தேங்காய், நெய் கலந்து, வைத்து கொள்ளவும்.

பிசறி வைத்த மாவை புட்டு வேக வைக்கும் குழாயில் போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான ரவா புட்டு ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News