பெண்கள் உலகம்

மாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்பெஷல் காய்கறி வடை

Published On 2018-03-30 11:44 IST   |   Update On 2018-03-30 11:44:00 IST
மாலை நேரத்தில் காபி அல்லது டீயை சூடான வடையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். இன்று காய்கறிகளை வைத்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

உளுத்தம்பருப்பு - 3 சிறிய கப்,
கடலைப்பருப்பு - 1 சிறிய கப்,
பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு,
பச்சைமிளகாய் - 3,
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்,
மெல்லியதாக நறுக்கிய பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட் - அனைத்தும் கலந்து 1 கப்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு.



செய்முறை :

கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவம்.

பருப்புகளை 1 மணி நேரம் ஊறவைத்து உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

பாத்திரத்தில் அரைத்த மாவு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, காய்கறிகள் சேர்த்து பிசைந்து சிறு உருண்டை அளவு மாவு எடுத்து வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சூப்பரான ஸ்பெஷல் காய்கறி வடை ரெடி.

சாம்பார், சட்னியுடன் பரிமாற சூப்பராக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News