லைஃப்ஸ்டைல்

மாலை நேர ஸ்நாக்ஸ் ஹராபாரா கபாப்

Published On 2017-07-26 07:22 GMT   |   Update On 2017-07-26 07:22 GMT
பாலக்கீரை, பச்சைப்பட்டாணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பாலக்கீரை, பச்சைப்பட்டாணி வைத்து சத்தான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாலக்கீரை - 2 கப்,
மீடியம் அளவு உருளைக்கிழங்கு - 3
தக்காளி - 2 ,
பச்சைப் பட்டாணி - 3/4 கப்,
சாட் மசாலாத்தூள் - 1  டீஸ்பூன்,
ஆம்சூர் தூள் - 1 டீஸ்பூன்,
இஞ்சி, பச்சை மிளகாய் விழுது அல்லது பொடியாக நறுக்கியது - 2 டீஸ்பூன்,
கடலை மாவு - 2 1/2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உப்புத் தண்ணீரில் கீரையை கழுவி நன்கு வடிகட்டி குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும். பிறகு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் கடலை மாவை அதன் கலர் மாறும் வகையில் நல்ல மணம் வரும்வரை வறுக்கவும். மிகவும் சிவந்துவிடக்கூடாது.

உருளைக்கிழங்கையும், பட்டாணியையும் வேக வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய கீரையை சேர்த்து தக்காளியையும் உருளைக்கிழங்கையும் சீவி போடவும்.

இத்துடன் பச்சை பட்டாணி, மிளகாய் விழுதையும் சேர்க்கவும்.

இந்த கபாப் கலவையை மத்தால் நன்கு மசிக்கவும்.

இத்துடன் காரப் பொடி, வறுத்த கடலை மாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

இதனை உருண்டையாக தட்டி வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி அதில் இந்த கபாபை போட்டு நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.

சூப்பரான ஹராபாரா கபாப் ரெடி.

இதனை சட்னி, சாஸுடன் பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News