லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு விருப்பமான கார்ன் புலாவ்

Published On 2017-07-12 07:30 GMT   |   Update On 2017-07-12 07:30 GMT
குழந்தைகளுக்கு சத்தான மதிய உணவு செய்து கொடுக்க விரும்பினால் இந்த கார்ன் புலாவ் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - ஒரு கப்
வேகவைத்து உரித்த கார்ன் முத்துக்கள் - அரை கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி விழுது - அரை கப்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
பிரியாணி மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்



செய்முறை :

* புதினா, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

* குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யைச் சேர்த்து சூடானதும், வெங்காயத்தை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

* பிறகு, தக்காளி விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), பிரியாணி மசாலாத்தூள், புதினா, கொத்தமல்லித்தழை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

* இத்துடன் ஒன்றரை கப் தண்ணீர், எலுமிச்சைச்சாறு, உப்பு, கார்ன் முத்துக்கள் சேர்த்துக் கலக்கவும்.

* அடுத்து அதில் அரிசியைச் சேர்த்துக் கலக்கி குக்கரை மூடி வெயிட் போடவும்.

* ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 2 நிமிடம் கழித்து இறக்கி விசில் போனவுடன் மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.

* சூப்பரான கார்ன் புலாவ் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News