லைஃப்ஸ்டைல்

சத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகுத் தட்டுவடை

Published On 2017-06-26 09:56 GMT   |   Update On 2017-06-26 09:56 GMT
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கேழ்வரகு தட்டுவடை செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு - அரை கிலோ,
வறுத்த உளுந்து - 50 கிராம்,
கடலைப் பருப்பு - 50 கிராம்,
உப்பு, மிளகாய்த் தூள், எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை:

* கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ளவும்.

* இந்த மாவுடன் வறுத்த உளுந்து சேர்த்து, நன்றாக அரைக்கவும்.

* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், கடலைப் பருப்பைச் சேர்த்து, நன்றாகக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.
* மாவை சிறிது எடுத்து சிறிய அளவில் உருண்டையாக உருட்டி, வாழை இலையில் போட்டு, மெல்லியதாகத் தட்டிக்கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டி வைத்துள்ள தட்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

* சூப்பரான ஸ்நாக்ஸ் கேழ்வரகுத் தட்டுவடை ரெடி.

* இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News