லைஃப்ஸ்டைல்

கத்தரிக்காய் கார குழம்பு செய்வது எப்படி

Published On 2017-06-21 07:28 GMT   |   Update On 2017-06-21 07:28 GMT
கத்தரிக்காய் வைத்து தொக்கு, புலாவ், குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று காரசாரமான புளிப்பான கத்தரிக்கய் கார குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கத்திரிக்காய் - 6
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
உளுந்து - 1/4 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 1 குழிக்கரண்டி
புளி கரைசல் - 1/2 கப்



செய்முறை :

* கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிரட்டி தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும்.

* மசாலா தூள்கள் வாசம் போக கொதித்து, கத்திரிக்காய் வெந்ததும், புளி கரைசல் சேர்த்து கிளறி, ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்கவிட்டு இறக்கி விடவும்.

* இதில் தூள் வகைகள் சேர்க்கும் போது கொஞ்சம் தயிர் (2 டீஸ்பூன்) சேர்த்தால் வித்தியாசமான டேஸ்ட் கிடைக்கும்.

* கத்தரிக்காய் கார குழம்பு ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News