பெண்கள் உலகம்
கலக்கலான காஷ்மீர் பிரியாணி செய்வது எப்படி
பிரியாணியில் பல்வேறு வகைகள் உள்ளது. அவற்றில் ஒன்றான சூப்பரான காஷ்மீர் பிரியாணி செய்வது எப்படி என்று இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கப்,
சிறிய சதுரமாக நறுக்கிய பழத்துண்டுகள் (அன்னாசி, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவை - டின்னில் கிடைக்கும்) - அரை கப்,
வெங்காயம் - 2,
உலர் திராட்சை, பேரீச்சை (விதை நீக்கி, நறுக்கியது), உலர் பூசணி விதை, டூட்டி ஃப்ரூட்டி, செர்ரிப்பழம், திராட்சைப்பழம் (விதையற்றது) - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன்,
குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
கிராம்பு - 2,
துருவிய பன்னீர் - 2 டேபிள்ஸ்பூன்,
ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
காய்ச்சி ஆறவைத்த பால் - சிறிதளவு,
பொடியாக நறுக்கிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசியை நீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து, அளவான உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெயை போட்டு சூடாக்கி வெங்காயத்தை போட்டு சிவக்க வறுத்து வைக்கவும்.
* வாணலியில் நெய்விட்டு சூடானதும் சீரகம் தாளித்த பின் கேரட், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும்...
* அடுத்து அதில் உலர் திராட்சை, பேரீச்சை, உலர் பூசணி விதை, டூட்டி ஃப்ரூட்டி, செர்ரிப்பழம், திராட்சைப்பழம், சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
* அடுத்து சாதம், ஏலக்காய்த்தூள், கிராம்பு சேர்த்து மேலும் கிளறவும்.
* இதனுடன் பன்னீர் துருவல், பழத்துண்டுகள் சேர்த்துக் கிளறவும்.
* பிறகு ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, குங்குமப்பூவைச் சிறிது பாலில் கரைத்து ஊற்றி, வதக்கிய வெங்காயத்தை மேலே சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
* சூப்பரான காஷ்மீர் பிரியாணி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாசுமதி அரிசி - ஒரு கப்,
சிறிய சதுரமாக நறுக்கிய பழத்துண்டுகள் (அன்னாசி, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவை - டின்னில் கிடைக்கும்) - அரை கப்,
வெங்காயம் - 2,
உலர் திராட்சை, பேரீச்சை (விதை நீக்கி, நறுக்கியது), உலர் பூசணி விதை, டூட்டி ஃப்ரூட்டி, செர்ரிப்பழம், திராட்சைப்பழம் (விதையற்றது) - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன்,
குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
கிராம்பு - 2,
துருவிய பன்னீர் - 2 டேபிள்ஸ்பூன்,
ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
காய்ச்சி ஆறவைத்த பால் - சிறிதளவு,
பொடியாக நறுக்கிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசியை நீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து, அளவான உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெயை போட்டு சூடாக்கி வெங்காயத்தை போட்டு சிவக்க வறுத்து வைக்கவும்.
* வாணலியில் நெய்விட்டு சூடானதும் சீரகம் தாளித்த பின் கேரட், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும்...
* அடுத்து அதில் உலர் திராட்சை, பேரீச்சை, உலர் பூசணி விதை, டூட்டி ஃப்ரூட்டி, செர்ரிப்பழம், திராட்சைப்பழம், சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
* அடுத்து சாதம், ஏலக்காய்த்தூள், கிராம்பு சேர்த்து மேலும் கிளறவும்.
* இதனுடன் பன்னீர் துருவல், பழத்துண்டுகள் சேர்த்துக் கிளறவும்.
* பிறகு ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, குங்குமப்பூவைச் சிறிது பாலில் கரைத்து ஊற்றி, வதக்கிய வெங்காயத்தை மேலே சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
* சூப்பரான காஷ்மீர் பிரியாணி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.