பெண்கள் உலகம்
குழந்தைகளுக்கு விருப்பமான சோயா லாலிபாப்
குழந்தைகளுக்கு சோயாவை இவ்வாறு லாலிபாப் போன்று செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த லாலிபாப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சோயா - 1/2 கப்,
உருளைக்கிழங்கு - 1,
பட்டாணி - ஒரு கைப்பிடி,
வெங்காயம் - 1,
கேரட் - 1,
குடை மிளகாய் - 1,
உப்பு - தேவைக்கேற்ப,
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவைக்கு,
லாலிபாப் போல் செய்ய குச்சிகள் - 6.
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
* சோயாவை கொதிக்கும் நீரில் 15 நிமிடம் போட்டு நன்றாக ஊறியதும் பிழிந்து எடுத்து மிக்சியில் போட்டு பூப்போல உதிர்த்து கொள்ளவும்.
* வெங்காயம், குடை மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் பட்டாணி, குடை மிளகாய், கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.
* காய்கறிகள் அனைத்தும் வதங்கியதும் நன்கு உதிர்த்த சோயா உப்பு சேர்த்து கலந்து விடவும்.
* நன்கு ஆறியவுடன் சோயா மசாலாவுடன் உருளைக்கிழங்கு, மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
* பொரித்து எடுத்த உருண்டைகளின் நடுவில் குச்சியில் குத்தி லாலிபாப் போல் செய்யவும்.
* சோயா லாலிபாப் ரெடி.
* இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சோயா - 1/2 கப்,
உருளைக்கிழங்கு - 1,
பட்டாணி - ஒரு கைப்பிடி,
வெங்காயம் - 1,
கேரட் - 1,
குடை மிளகாய் - 1,
உப்பு - தேவைக்கேற்ப,
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவைக்கு,
லாலிபாப் போல் செய்ய குச்சிகள் - 6.
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
* சோயாவை கொதிக்கும் நீரில் 15 நிமிடம் போட்டு நன்றாக ஊறியதும் பிழிந்து எடுத்து மிக்சியில் போட்டு பூப்போல உதிர்த்து கொள்ளவும்.
* வெங்காயம், குடை மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் பட்டாணி, குடை மிளகாய், கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.
* காய்கறிகள் அனைத்தும் வதங்கியதும் நன்கு உதிர்த்த சோயா உப்பு சேர்த்து கலந்து விடவும்.
* நன்கு ஆறியவுடன் சோயா மசாலாவுடன் உருளைக்கிழங்கு, மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
* பொரித்து எடுத்த உருண்டைகளின் நடுவில் குச்சியில் குத்தி லாலிபாப் போல் செய்யவும்.
* சோயா லாலிபாப் ரெடி.
* இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.