பெண்கள் உலகம்

அருமையான மதிய உணவு உருளைக்கிழங்கு - புதினா புலாவ்

Published On 2017-06-09 12:56 IST   |   Update On 2017-06-09 12:56:00 IST
காலையில் வேலைக்கு அவரசமாக கிளம்பும் போது, மதியம் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு அருமையான ரெசிபியை செய்ய வேண்டுமானால், புதினா புலாவ் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 1 கப்
வெங்காயம் - 1
உருளைக்கிழங்கு - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பட்டை - 1/2 இன்ச்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு...

புதினா - 1 கட்டு
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1/2
பச்சை மிளகாய் - 1



செய்முறை :


* வெங்காயம், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்து, நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* மிக்ஸியில் புதினா, தேங்காய், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்த பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

* அடுத்து வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.

* அடுத்து அதில் உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் அரிசியை சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

* இறுதியாக அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், புதினா புலாவ் ரெடி!!!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News