லைஃப்ஸ்டைல்

சூப்பரான மாலை நேர டிபன் பன்னீர் ஊத்தப்பம்

Published On 2017-06-02 07:21 GMT   |   Update On 2017-06-02 07:21 GMT
குழந்தைகளுக்கு பன்னீர் மிகவும் பிடிக்கும். மாலையில் குழந்தைகளுக்கு சத்தான டிபன் கொடுக்க நினைத்தால் இந்த பன்னீர் ஊத்தப்பம் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :

உளுந்து - கால் கப்
வெந்தயம் - சிறிதளவு
பச்சரிசி - அரை கப்
புழுங்கல் அரிசி - கால் கப்
பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
ப.மிளகாய் - இரண்டு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு



செய்முறை :

* தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பன்னீரை துருவிக்கொள்ளவும்.

* உளுந்து, வெந்தயம், பச்சரிசி, புழுங்கலரிசி ஆகியவைகளை நன்றாக கழுவி நான்கு மணிநேரம் ஊறவையுங்கள். உளுந்தையும், அரிசியையும் தனித்தனியாக அரைத்து, தேவைக்கு உப்பும் சேர்த்து ஒன்றாக கலக்கி ஐந்து மணிநேரம் புளிக்க விடவும்.

* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், துருவிய பன்னீர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை கெட்டியாக ஊற்றி அதன் மாவின் மேல் பிசறி வைத்த பன்னீர் கலவையை தூவ வேண்டும். சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* சூப்பரான பன்னீர் ஊத்தப்பம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News