லைஃப்ஸ்டைல்

பன்னீர் இனிப்பு போளி செய்வது எப்படி

Published On 2016-09-20 01:50 GMT   |   Update On 2016-09-20 03:11 GMT
பன்னீர் போளி மிகவும் சுவையாக இருக்கும். பன்னீர் வைத்து போளி செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மைதா - ஒரு கோப்பை
கோதுமை மாவு - ஒரு கோப்பை
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
உப்புத்துள் -  ஒரு சிட்டிகை
துருவிய பன்னீர் -  முக்கால் கோப்பை
துருவிய தேங்காய் -  அரைகோப்பை
வெல்லம் - 1/2 கோப்பை
ஏலக்காய் - நான்கு
பொடித்த முந்திரி  - தேவைக்கு
நெய்/எண்ணெய் -  தேவைக்கேற்ப

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவை ஒன்றாக கலந்து அதில் உப்பு மற்றும் எண்ணெயை ஊற்றி நீரைத் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து குறைந்தது அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

* மிக்ஸியில் வெல்லத்துடன் ஏலக்காயைச் சேர்த்து நன்கு பொடித்து வைக்கவும்

* வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றி அதில் துருவிய பன்னீரைப் போட்டு ஈரம் போக வறுத்து தனியே ஆற வைக்கவும்.

* பின்பு அதே வாணலியில் தேங்காயை கொட்டி இளஞ்சிவப்பாக வறுத்து ஆறவைத்து அதையும் பன்னீரில் கொட்டி கலக்கவும்.

* பின்பு அதில் பொடித்த வெல்லம் மற்றும் முந்திரி பொடியையும் சேர்த்து நன்கு கலந்து பூரணம் தயாரிக்கவும்.

* பிசைந்து வைத்த மாவிலிருந்து ஒரு எலுமிச்சையளவு உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் வட்டமாக இட்டு அதன் நடுவில் சிறிது பூரணத்தை வைத்து மூடி இலேசாக அழுத்தி மீண்டும் தேய்த்து வைக்கவும்.

* இவ்வாறு அனைத்து மாவையும் போளியாக இட்டு வைக்கவும்.

* தோசை தவாவை அடுப்பில் வைத்து தயாரித்து வைத்துள்ள போளியைப் போட்டு இரண்டு புறமும் நெய்யை தடவி வேக வைத்து தீயாமல் சுட்டெடுக்கவும்.

* பன்னீர் இனிப்பு போளி ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News