பெண்கள் உலகம்

மாலை நேர ஸ்நாக்ஸ் பயத்தம் பருப்பு தயிர் போண்டா

Published On 2016-09-16 14:12 IST   |   Update On 2016-09-16 14:12:00 IST
மாலை நேரத்தில் சூடாக சாப்பிட சூப்பரான பயத்தம் பருப்பு தயிர் போண்டாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள் :

பயத்தம் பருப்பு - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
பச்சை மிளகாய் - 4 
இஞ்சி - ஒரு சிறு துண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
தயிர் - 3 கப் அல்லது தேவைக்கேற்றவாறு
வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைத்து நன்றாக கழுவி தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாக அரைத்தெடுக்கவும்.

*அரைத்த மாவில் பொடியாக நறுக்கி வெங்காயத்தை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

* ஒரு அகன்ற பாத்திரத்தில் 5 அல்லது 6 கப் தண்ணீரை விட்டு, கொதிக்க வைத்து, இறக்கி வைக்கவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு, எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து எண்ணெயில் போடவும். 

* எண்ணெய் கொள்ளுமளவிற்கு 4 அல்லது 5 போண்டாவைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து, கொதிக்க வைத்துள்ள வென்னீரில் போடவும். போண்டா வென்னீரில் ஊறி சற்று மிருதுவானவுடன், ஒரு கரண்டியால் எடுத்து, இலேசாக பிழிந்து விட்டு, ஒரு தட்டில் பரவலாக அடுக்கி வைக்கவும். 

* தயிரை நன்றாகக் கடைந்து விட்டு, சிறிது உப்பைச் சேர்த்துக் கலக்கி, போண்டாவின் மேல் ஊற்றவும். அதன் மேல் மிளகாய்த்தூளைத் தூவி பரிமாறவும்.

* சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் பயத்தம் பருப்பு தயிர் போண்டா ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News