பெண்கள் உலகம்

செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை

Published On 2016-09-12 14:18 IST   |   Update On 2016-09-12 14:18:00 IST
செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை மிகவும் சுவையாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மட்டன் கைமா - 750 கிராம்
பெரிய வெங்காயம் - 1
துருவிய தேங்காய் - 3/4 கப்
முட்டை - 1
பச்சை மிளகாய் - 7
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
கசகசா - 2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பற்கள்
மஞ்சள் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மிக்ஸியில் தேங்காய், பொட்டுக்கடலை மற்றும் கசகசா சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடம் நன்கு வதக்கி, பின் இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* மிக்ஸியில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் மட்டன் கைமா, முட்டை, தேங்காய் பேஸ்ட் மற்றும் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

* பிசைந்து வைத்த மசாலாவை உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

* சுவையான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை ரெடி!!!

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News