பெண்கள் உலகம்

கடலைப் பருப்பு பக்கோடா செய்வது எப்படி

Published On 2016-08-30 14:16 IST   |   Update On 2016-08-30 14:16:00 IST
கடலைப் பருப்பை வைத்து எப்படி சுவையான பக்கோடா செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கடலைப் பருப்பு - 1 கப்,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
இஞ்சி - 1 துண்டு,
பச்சை மிளகாய்  -  2,
பூண்டு -  4 பல்,
புதினா, கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை - தலா சிறிதளவு,
சோம்பு  -  அரை ஸ்பூன்,
உப்பு  -  சுவைக்கேற்ப,
எண்ணெய்  -  தேவையான அளவு.  

செய்முறை :

* வெங்காயம், கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து நசுக்கிக் கொள்ளுங்கள்.

* சோம்பைப் பொடித்துக்கொள்ளுங்கள்.

* கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி, நசுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சோம்பு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறிது சிறிதாக எடுத்து போட்டு வேக விட்டு பொரித்து எடுக்கவும்.

* சுவையான கடலைப் பருப்பு பக்கோடா ரெடி.

* இதை சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கும் காரக்குழம்பு, மோர்க்குழம்பில் போடுவதற்கும் ஏற்ற பக்கோடா இது. 

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News