பெண்கள் உலகம்

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: வெல்ல சீடை

Published On 2016-08-24 14:13 IST   |   Update On 2016-08-24 14:13:00 IST
இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யும் இனிப்பு, கார வகைகளை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 2 கப்
உளுத்த மாவு - ஒரு பிடி ( வறுத்து அரைத்தது )
வெல்லம் - 1 1/2 கப்  
எள் - கொஞ்சம்
ஏலப்பொடி பொடி - 1/4 டீ ஸ்பூன்
நெய் -  1 டேபிள் ஸ்பூன்
பொறிக்க - எண்ணெய்

செய்முறை :

* முதலில் அரிசியை களைந்து உலர்த்தவும். இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம். அரிசி காய்ந்ததும், மிக்சியில் மாவாக அரைத்து, சலித்து வைக்கவும். சலித்த மாவை வெறும் வாணலியில் வறுக்கவும்.

* எள்ளை சுத்தம் செய்து வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு தூள் செய்த வெல்லத்தை போட்டு நன்றாக கலக்கவும். வெல்லம் கரைந்ததும், வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கும் போது, எள், ஏலப்பொடி எல்லாம் போட்டு நன்கு கலக்கவும்.

* பின் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, நெய் போட்டு இறக்கி வைத்து நன்கு கிளறவும்.

* கொஞ்சம் ஆறினதும் அழுத்தி பிசையவும்.

* ஒரு வெள்ளை துணி அல்லது எண்ணெய் தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக ஆனால் உப்பு சீடையை விட சற்று பெரியதாக மொத்த மாவையும் உருட்டி வைக்கவும்.

* அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.

* 'கரகர' ப்பான 'வெல்ல சீடை' ரெடி.

குறிப்பு:

இதில் துளி கல் மண் இருந்தாலும் சீடை வெடிக்கும். சீடை கொஞ்சம் ஆறினதும் கையால் அழுத்தி பார்க்கணும். உடனே  உடைந்தால் நல்லா வந்திருக்கு என்று அர்த்தம். இல்லா விட்டால் இன்னும் கொஞ்ச நேரம் அடுப்பில் வைத்து எடுக்க வேண்டும் என்று அர்த்தம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News