பெண்கள் உலகம்

தித்திப்பான சேமியா கேசரி செய்வது எப்படி

Published On 2016-08-10 14:51 IST   |   Update On 2016-08-10 14:51:00 IST
ரவைக்கு பதிலான சேமியாவில் கேசரி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். சேமியா கேசரி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சேமியா  -  500 கிராம்
சர்க்கரை  -  400 கிராம்
தண்ணீர்  -  400 மி.லி.
நெய்  -  தேவையான அளவு
முந்திரி பருப்பு  - தேவையான அளவு
திராட்சை - தேவையான அளவு
ஏலக்காய்  -  3
கேசரி பவுடர்  -  சிறிதளவு

செய்முறை :

* சேமியா, முந்திரிப்பருப்பு, திராட்சையை தனித்தனியாக நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சிறிது சிறிதாக சேமியா போட்டு கிளறி வேகவிடவும். கட்டி விழாமல் இருக்க கைவிடாமல் கிளற வேண்டும்.

* சேமியா வெந்ததும் சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

* எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் போது கடைசியாக முந்திரிபருப்பு, திராட்சை, மீதியுள்ள நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

* பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கிப் பறிமாறவும்.

* சுவையான சேமியா கேசரி தயார்.

* இதில் உங்களுக்கு பிடித்தமான நட்ஸ் எதை வேண்டுமானதும் சேர்த்து கொள்ளலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News