பெண்கள் உலகம்

இனிப்பான அடைப்பிரதமன் செய்வது எப்படி

Published On 2016-08-04 14:24 IST   |   Update On 2016-08-04 14:24:00 IST
கேரளாவின் பாரம்பரியமான டிஷ்ஷான அடைப்பிரதமன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பச்சரிசி - ஒரு கப்,
வெல்லம் - 100 கிராம்,
தேங்காய் - ஒன்று,
முந்திரி, திராட்சை - தேவையான அளவு
ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை,
நெய் - தேவையான அளவு,
எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை :

* தேங்காயை துருவி மிக்சியில் போட்டு அரைத்து பால் எடுக்கவும்.

* பச்சரிசியை ஊற வைத்து நைஸாக அரைக்கவும்.

* ஒரு தட்டில் எண்ணெய் தடவி பச்சரிசி மாவை ஊற்றி, ஆவியில் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டவும்.

* அடுப்பில் அடிகனமான ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அடை துண்டுகளுடன் ஏலக்காய்த் தூள் சேர்க்கவும்.

* அடுத்து அதில் தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

* கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை போட்டு வறுத்து அடைப் பிரதமனில் சேர்க்கவும்.

* கேரளாவின் பாரம்பரியமான டிஷ் இது!

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News