லைஃப்ஸ்டைல்

பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி

Published On 2016-07-23 08:50 GMT   |   Update On 2016-07-23 08:50 GMT
பாகற்காய் சிப்ஸ் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பெரிய பாகற்காய்  - 250 கிராம்
பெருங்காயத்தூள்  - ஒரு சிட்டிகை,
நசுக்கிய பூண்டு  - ஒரு டேபிள்ஸ்பூன்,
கடலை மாவு  - 5 டேபிள்ஸ்பூன்,
அரிசி மாவு  - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள்  - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
மஞ்சள்தூள்  - ஒரு சிட்டிகை,
தயிர்  - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு  - தேவைக்கேற்ப,
எண்ணெய்  - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை :

* பாகற்காயை வட்டவட்டமாக நறுக்கி உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்து விடவும்.



* வெட்டிய பாகற்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் உப்பு, மஞ்சள்தூள், தயிர் சேர்த்துப் பிசிறி 20 நிமிடங்கள் ஊறவிடவும்.



* பிறகு தண்ணீர் விட்டுக் கழுவி நீர்போக பாகற்காயை வடிகட்டவும். (இப்படிச் செய்வதால் கசப்பு தெரியாது).

* வடிகட்டிய பாகற்காயுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், நசுக்கிய பூண்டு சேர்த்து, சிறிதளவு நீர் சேர்த்துப் பிசிறவும்.



* கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காயைப் போட்டு பொரித்து எடுக்கவும்.



* எண்ணெயை வடியவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும். இவ்வாறு செய்து 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News