பெண்கள் உலகம்

எளிமையான முறையில் அப்பளக் குழம்பு செய்து எப்படி

Published On 2016-07-20 14:07 IST   |   Update On 2016-07-20 14:07:00 IST
குழம்பு செய்ய காய்கறிகள் இல்லாத போது இந்த திடீர் அப்பள குழம்பை செய்து அசத்தலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

புளி - நெல்லிக்காய் அளவு,
அப்பளம் - 5,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1

செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அப்பளத்தை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

* புளியை நன்றாக கரைத்துகொள்ளவும்.

* ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதங்கிய பின்னர் தக்காளியை போட்டு வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் சாம்பார் பொடி, மிளகாய் தூள் சேர்த்து வதக்கிய பின் புளி கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.



* நன்றாக கொதிக்கும் போது உப்பு சேர்க்கவும்.

* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு தாளித்த பின் வெட்டி வைத்துள்ள அப்பளத்தை போட்டு சிறிது வதக்கி கொதித்து கொண்டிருக்கும் குழம்பில் சேர்த்து 5 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து இறக்கவும்

* சுவையான அப்பளக் குழம்பு ரெடி.

* குழம்பு வைக்க காய்கறிகள் இல்லாத நேரத்தில் இந்த அப்பளக் குழம்பு பெரிதும் உதவும். செய்வதும் சுலபமானது.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News