பெண்கள் உலகம்
ரம்ஜான் ஸ்பெஷல்: சேமியா மட்டன் பிரியாணி
ரம்ஜான் பண்டிகையில் போது காலை சிற்றுண்டியாக சாப்பிட சுவையான சேமியா மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் - அரை கிலோ
சேமியா - அரை கிலோ
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 50 மில்லி
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
சில்லி பவுடர் - 1 1/2 தேக்கரண்டி (காரம் அவரவர் விருப்பம்)
தயிர் - 4 மேசைக்கரண்டி
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 200 கிராம்
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி, புதினா - தலா கைப்பிடியளவு
எலுமிச்சைபழம் - பாதி
தேங்காய் பாதி - துருவிக் கொள்ளவும் (பால் எடுக்கவும்)
உப்பு - தேவைக்கு.
செய்முறை :
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்ற சேமியாவை பொன் முறுகலாக வறுத்துக் கொள்ளவும்.
* மட்டனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதனுடன் அரை தேக்கரண்டி சில்லி பவுடர், அரை மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 2 மேசைக்கரண்டி தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* தேங்காயை துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
* குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் சிவந்தவுடன் மீதியுள்ள இஞ்சி பூண்டு விழுது, கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கி 2 நிமிடம் வைக்கவும்.
* பின்பு கொத்தமல்லி, புதினா, ப.மிளகாய், தக்காளி, சில்லி பவுடர், உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது ஊற வைத்திருக்கும் மட்டனை அதனுடன் சேர்த்து, அரை கப் தண்ணீர் சேர்த்து பிரட்டி விட்டு குக்கரை மூடி 5 விசில் வைத்து இறக்கவும்.
* சேமியா பிரியாணிக்கான மட்டன் கிரேவி ரெடியாகி விட்டது.
* மட்டன் வெந்ததும் மசாலாவுடன் இருக்கும் மட்டனை அடி கனமான பாத்திரத்திற்கு மாற்றவும். ஓரளவு தண்ணீர் மட்டனில் இருக்கும்.
மீதி தண்ணீருக்கு தேங்காய்பாலுடன் தண்ணீரை சேர்த்து அளந்து வைக்கவும். (தண்ணீரின் அளவு - சேமியா ஒன்றுக்கு ஒன்றரை அளவு இருக்க வேண்டும்.)
* பாதி எலுமிச்சை பழத்தை விதை நீக்கி அதில் அதில் பிழியவும். உப்பு சரிபார்க்கவும். கொதி வந்தவுடன் அதில் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை சேர்க்கவும். பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து சேமியாவை வேக விடவும்.
* சேமியா வெந்ததும் சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கிளறி விடவும்.
* அடுத்து அதில் நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலை தூவி அடுப்பை அணைக்கவும்.
* நன்கு ஒரு சேர பிரட்டி மூடவும்.
* பத்து நிமிடம் கழித்து திறந்து தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
* ரம்ஜான் ஸ்பெஷல் சேமியா மட்டன் பிரியாணி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்டன் - அரை கிலோ
சேமியா - அரை கிலோ
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 50 மில்லி
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
சில்லி பவுடர் - 1 1/2 தேக்கரண்டி (காரம் அவரவர் விருப்பம்)
தயிர் - 4 மேசைக்கரண்டி
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 200 கிராம்
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி, புதினா - தலா கைப்பிடியளவு
எலுமிச்சைபழம் - பாதி
தேங்காய் பாதி - துருவிக் கொள்ளவும் (பால் எடுக்கவும்)
உப்பு - தேவைக்கு.
செய்முறை :
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்ற சேமியாவை பொன் முறுகலாக வறுத்துக் கொள்ளவும்.
* மட்டனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதனுடன் அரை தேக்கரண்டி சில்லி பவுடர், அரை மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 2 மேசைக்கரண்டி தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* தேங்காயை துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
* குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் சிவந்தவுடன் மீதியுள்ள இஞ்சி பூண்டு விழுது, கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கி 2 நிமிடம் வைக்கவும்.
* பின்பு கொத்தமல்லி, புதினா, ப.மிளகாய், தக்காளி, சில்லி பவுடர், உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது ஊற வைத்திருக்கும் மட்டனை அதனுடன் சேர்த்து, அரை கப் தண்ணீர் சேர்த்து பிரட்டி விட்டு குக்கரை மூடி 5 விசில் வைத்து இறக்கவும்.
* சேமியா பிரியாணிக்கான மட்டன் கிரேவி ரெடியாகி விட்டது.
* மட்டன் வெந்ததும் மசாலாவுடன் இருக்கும் மட்டனை அடி கனமான பாத்திரத்திற்கு மாற்றவும். ஓரளவு தண்ணீர் மட்டனில் இருக்கும்.
மீதி தண்ணீருக்கு தேங்காய்பாலுடன் தண்ணீரை சேர்த்து அளந்து வைக்கவும். (தண்ணீரின் அளவு - சேமியா ஒன்றுக்கு ஒன்றரை அளவு இருக்க வேண்டும்.)
* பாதி எலுமிச்சை பழத்தை விதை நீக்கி அதில் அதில் பிழியவும். உப்பு சரிபார்க்கவும். கொதி வந்தவுடன் அதில் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை சேர்க்கவும். பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து சேமியாவை வேக விடவும்.
* சேமியா வெந்ததும் சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கிளறி விடவும்.
* அடுத்து அதில் நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலை தூவி அடுப்பை அணைக்கவும்.
* நன்கு ஒரு சேர பிரட்டி மூடவும்.
* பத்து நிமிடம் கழித்து திறந்து தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
* ரம்ஜான் ஸ்பெஷல் சேமியா மட்டன் பிரியாணி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.