பெண்கள் உலகம்

ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் கீமா நோன்பு கஞ்சி

Published On 2016-06-30 14:14 IST   |   Update On 2016-06-30 14:14:00 IST
இஸ்லாமிய‌ இல்ல‌ங்க‌ளில் நோன்பு கால‌ங்க‌ளில் செய்யும் க‌ஞ்சியின் சுவைக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது.
தேவையான பொருட்கள் :

மட்டன் கீமா - 150 கிராம்
பாசுமதி அரிசி மிக்சியில் பொடித்த நொய் - முக்கால் டம்ளர்
பாசிப்பருப்பு - இரண்டு மேசை கரண்டி (பொங்கலுக்கு போடுவது)
வெங்காயம் - ஒன்று பெரியது
தக்காளி - ஒன்று
தயிர் - ஒரு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி
கேரட் - அரை துண்டு
ப.மிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - அரை தேக்காண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
தேங்காய் - இரண்டு பத்தை
பட்டை கிராம்பு, ஏலம் - தலா ஒன்று
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிது
புதினா - சிறிது

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவேன்டும்.

* புதினா, கொத்துமல்லி, ப.மிளகாயை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கீமாவை சுத்தம் செய்து தண்ணீரை இல்லாமல் வடித்து வைக்க வேண்டும்.

* கேரட்டை துருவி வைக்க வேண்டும்.

* அரிசி, பருப்பை களைந்து ஊறவைக்க வேண்டும்.

* குக்கரில் நெய்+டால்டாவை ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை பொட்டு நன்கு வதக்க வேண்டும்.

* வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.(பச்ச வாடை போகும் வரை)
* அடுத்து அதில் தக்காளி ப.மிளகாய் போட்டு நன்கு வதக்கவேண்டும்.

* தக்காளி சுருண்டதும் கீமா, கேரட், உப்பு, மிளகாய் தூள், கொத்தமல்லி, புதினா, மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு நன்கு வதக்கவேண்டும்.

* தயிர் சேர்த்து கிளறி தண்ணீர் அளந்து ஊற்ற வேண்டும். ஒன்றுக்கு நாலு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நொயையும், பருப்பையும் தண்ணீரை வடித்து போட்டு குக்கரை மூடி வெயிட் போட்டு தீயை குறைத்து வைத்து 5 விசில் வந்ததும் அடுப்பை மிதமான தீயில் 15 நிமிடம் வைத்து அடுப்பை அணைத்து விடவேண்டும்.

* ஆவி அடங்கிய‌தும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவை இறக்கி பரிமாறவும்.

* சுவையான மட்டன் கீமா நோன்பு கஞ்சி தயார்.

குறிப்பு :

குக்கரில் செய்வதால் கஞ்சியை சூட்டோடு அப்படியே குக்கரில் வைக்க கூடாது. செய்து முடித்ததும் கிளறி விட்டு வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விட வேண்டும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News