பெண்கள் உலகம்

குழந்தைகளுக்கு விருப்பமான நெய் சாதம்

Published On 2016-06-23 10:32 IST   |   Update On 2016-06-23 10:33:00 IST
வளரும் குழந்தைகளுக்கு நெய் சேர்த்த உணவுகளை கொடுக்கவேண்டும். நெய்சாதம் ஊட்டச்சத்து மிக்கது. எளிதில் செய்யலாம்.
தேவையான பொருட்கள் :

பொன்னி அரிசி - கால் கிலோ
நெய் - 100 கிராம்
பட்டை - 3 துண்டுகள் (சிறியது)
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
பூண்டு - 7 பல்
பிரியாணி இலை - 1
கறிவேப்பிலை - ஒரு கொத்து
முந்திரி, திராட்சை - தேவைக்கு

செய்முறை :

* அரிசியை 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வடித்து கொள்ளவும்.

* பூண்டை தோல் உரித்து தட்டிக் கொள்ளவும். ஏலக்காயை லேசாக தட்டிக் கொள்ளவும்.

* அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, சேர்த்து தாளித்த பின் முந்திரி, திராட்சை சேர்க்கவும்.

* அடுத்து அதில் வடிகட்டிய அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறவும்.

* இதனுடன் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கர் மூடி போடவும். விசில் போடாமல் மிதமான தீயில் 10 நிமிடம் வேகவைக்கவும். பத்துநிமிடம் கழித்து சாதம் குழையும் முன் இறக்கி வைக்கவும்.

* சுவையான நெய் சாதம் தயார்.

* இதனுடன் சைடு டிஸ்சாக குருமா, ரைத்தா தொட்டுக்கொள்ளலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News