பெண்கள் உலகம்
முட்டை மசாலாவில் பல ஸ்டைல்கள் உள்ளன. அந்த வகையில் பஞ்சாபி முட்டை மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 5
வெங்காயம் - 2
பிரியாணி இலை - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
தக்காளி சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
காய்ந்த வெந்தய இலை - 1 டேபிள் ஸ்பூன் (கையால் பொடி செய்தது)
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
மசாலா பேஸ்ட்டிற்கு :
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 5 பற்கள்
கிராம்பு - 2
பட்டை - 1
சோம்பு - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* காய்ந்த வெந்தயக்கீரையை கைகளால் பொடித்து வைக்கவும்.
* முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து தனியாக வைக்கவும்.
* மசாலாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், பிரியாணி இலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மாங்காய் தூள், தக்காளி சாறு சேர்த்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை சேர்த்து, 6 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் உப்பு, கரம் மசாலா சேர்த்து 4 நிமிடம் வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள முட்டையை இரண்டாக வெட்டி போட்டு, தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் கொதிக்க விடவும்.
* கடைசியாக காய்ந்த வெந்தய இலையை தூவி இறக்கினால், சுவையான பஞ்சாபி முட்டை மசாலா ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முட்டை - 5
வெங்காயம் - 2
பிரியாணி இலை - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
தக்காளி சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
காய்ந்த வெந்தய இலை - 1 டேபிள் ஸ்பூன் (கையால் பொடி செய்தது)
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
மசாலா பேஸ்ட்டிற்கு :
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 5 பற்கள்
கிராம்பு - 2
பட்டை - 1
சோம்பு - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* காய்ந்த வெந்தயக்கீரையை கைகளால் பொடித்து வைக்கவும்.
* முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து தனியாக வைக்கவும்.
* மசாலாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், பிரியாணி இலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மாங்காய் தூள், தக்காளி சாறு சேர்த்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை சேர்த்து, 6 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் உப்பு, கரம் மசாலா சேர்த்து 4 நிமிடம் வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள முட்டையை இரண்டாக வெட்டி போட்டு, தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் கொதிக்க விடவும்.
* கடைசியாக காய்ந்த வெந்தய இலையை தூவி இறக்கினால், சுவையான பஞ்சாபி முட்டை மசாலா ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.