பெண்கள் உலகம்
கேரளா கடலைப்பருப்பு செய்முறை விளக்கம்
கேரளாவில் ஓணம் பண்டிகையில் போது செய்யப்படும் பல்வேறு வகையான ரெசிபிக்களில் ஒன்று தான் கேரளா பருப்பு பாயாசம். இதை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு - 1/2 கப்
நாட்டுச்சர்க்கரை - 1/2 கப்
தேங்காய் பால் - 1/2 கப்
பால் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
சுக்கு பொடி - 1 சிட்டிகை
நெய் - தேவைக்கு
செய்முறை :
* நெய்யில் முந்திரியை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* நாட்டுச்சர்க்கரையை ஒரு அடிகனமாக பாத்திரத்தில் கொட்டு அதில் தேவையான தண்ணீர் ஊற்றி சர்க்கரை நன்றாக கரையும் வரை சூடேற்றி, பின் அதனை வட்டிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, குக்கரில் போட்டு, அதில் போதிய அளவில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். (பருப்பு நன்கு மசியும் அளவில் வேக வைக்க வேண்டாம்.)
* வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் சூடேற்றி, அதில் வேக வைத்துள்ள கடலைப் பருப்பு சேர்த்து கரண்டியால் பருப்பை மசித்து விட வேண்டும். பருப்பானது வெல்லப் பாகுவுடன் நன்கு ஒன்று சேர்ந்தவுடன், அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
* பாயாசம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்கு பொடி, பால் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து முந்திரியை தூவி இறக்கினால், கேரளா பருப்பு பாயாசம் ரெடி!!!
* விருப்பப்பட்டால் தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து அதையும் பாயாசத்தில் சேர்க்கலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கடலைப்பருப்பு - 1/2 கப்
நாட்டுச்சர்க்கரை - 1/2 கப்
தேங்காய் பால் - 1/2 கப்
பால் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
சுக்கு பொடி - 1 சிட்டிகை
நெய் - தேவைக்கு
செய்முறை :
* நெய்யில் முந்திரியை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* நாட்டுச்சர்க்கரையை ஒரு அடிகனமாக பாத்திரத்தில் கொட்டு அதில் தேவையான தண்ணீர் ஊற்றி சர்க்கரை நன்றாக கரையும் வரை சூடேற்றி, பின் அதனை வட்டிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, குக்கரில் போட்டு, அதில் போதிய அளவில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். (பருப்பு நன்கு மசியும் அளவில் வேக வைக்க வேண்டாம்.)
* வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் சூடேற்றி, அதில் வேக வைத்துள்ள கடலைப் பருப்பு சேர்த்து கரண்டியால் பருப்பை மசித்து விட வேண்டும். பருப்பானது வெல்லப் பாகுவுடன் நன்கு ஒன்று சேர்ந்தவுடன், அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
* பாயாசம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்கு பொடி, பால் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து முந்திரியை தூவி இறக்கினால், கேரளா பருப்பு பாயாசம் ரெடி!!!
* விருப்பப்பட்டால் தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து அதையும் பாயாசத்தில் சேர்க்கலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.