சமையல்

Cooking Tips| கறிவேப்பிலை முதல் முருங்கை இலை வரை... பயனுள்ள சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

Published On 2026-03-15 08:45 IST   |   Update On 2026-03-15 08:45:00 IST
  • வெந்தயம் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
  • ஓமம், சீரகம், சுக்கு வறுத்து பொடி செய்து தினமும் கொதிக்க வைத்து குடித்தால் அஜீரண கோளாறு இருக்காது.

* கறிவேப்பிலையை பொடியாக அரைத்து ரசம், சாம்பார் இறக்கும் போது ஒரு டீஸ்பூன் போட்டால் வாசனையாக இருக்கும். கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் சாப்பிடலாம்.

* வாரத்தில் ஒரு நாள் வேப்பிலை, சுண்டைக்காய், கண்ட திப்பிலி அரிசி திப்பிலி, தனியா, மிளகு ஆகியவற்றை சிறிதளவு வறுத்து பொடி செய்து சாப்பிட்டால் வாயு தொல்லை, பித்தம் குறையும்.

* வெந்தயம் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். சாம்பார் கொதிக்கும்போது போட்டால் வாசனையாக இருக்கும். மோரில் ஒரு டிஸ்பூன் போட்டு குடித்தால் மலச்சிக்கல் வராது.

* தனியா, கடலை பருப்பு, மிளகாய், பெருங்காயம் வறுத்து பொடி செய்து பொரியல், கூட்டு எல்லாவற்றிலும் உபயோகிக்கலாம். ருசியாக இருக்கும்.

* ஓமம், சீரகம், சுக்கு வறுத்து பொடி செய்து தினமும் கொதிக்க வைத்து குடித்தால் அஜீரண கோளாறு இருக்காது.

* முருங்கை இலைகளை கொதிக்க வைத்து அந்த நீரில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு குடிப்பது எலும்புக்கு பலம் சேர்க்கும். 

Tags:    

Similar News