சமையல்

ஹெல்த்தியான ராகி சேமியா பிரியாணி...!

Published On 2024-03-19 10:25 GMT   |   Update On 2024-03-19 10:25 GMT
  • பிரியாணி மசாலாவின் சுவை அனைவருக்கும் பிடித்தமானது.
  • குழந்தைகள் சப்புக் கொட்டி சாப்பிடுவார்கள்.

பிரியாணியில் சேர்க்கப்படும் மசாலாவின் சுவை அனைவருக்கும் பிடித்தமானது தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு மதியம் லஞ்ச் பாக்சில் கொடுத்து அனுப்பினால் கண்டிப்பாக டிபன்பாக்ஸ் காலியாக வரும் என்பது உறுது. காலை உணவு அல்லது இரவு உணவு சமைக்கும் பொழுது இப்படி ராகி சேமியாவில் ஒரு பிரியாணி செய்து கொடுத்தால் குழந்தைகள் சப்புக் கொட்டி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். வாருங்கள் ராகி சேமியா பிரியாணியை எப்படி என்பது பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

ராகி சேமியா — 1 கப்

பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு – 1/2 கப்

பச்சை பட்டாணி – 1/4 கப்

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 1

பட்டை – 1

ஏலக்காய், கிராம்பு – 2

கரம் மசாலா துாள் – 1/2 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்

மஞ்சள் துாள் – 1/4 தேக்கரண்டி

மிளகாய் துாள் – 1/2 மேஜைக்கரண்டி

எண்ணெய், கல் உப்பு, கொத்தமல்லி தழை,

புதினா – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில், எண்ணெய் ஊற்றி, பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளிக்க வேண்டும். அதில் வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு வதக்க வேண்டும். மஞ்சள் துாள், மிளகாய் துாள், கரம் மசாலாத்துாள், தக்காளி, பச்சை பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு, புதினா, போட்டு வதக்க வேண்டும். பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்து, இரண்டு கப் நீர் ஊற்ற வேண்டும்.

நீர் கொதித்தவுடன், ராகி சேமியாவைப் போட்டு கிளறி, அடுப்பை, `சிம்'மில் வைத்து, கொத்தமல்லி தழை துாவினால், ராகி சேமியா பிரியாணி தயார். சாப்பிட சுவையாக இருக்கும்; ராகி சேமியா சாப்பிடாத குழந்தைகள் இந்த பிரியாணியை விரும்பி சாப்பிடுவர்.

Tags:    

Similar News