சமையல்

செட்டிநாடு ஸ்பெஷல் தேங்காய்பால் குணுக்கு

Published On 2024-05-23 06:54 GMT   |   Update On 2024-05-23 06:54 GMT
  • காலை உணவாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்.
  • வயிற்றில் உள்ள புண்களை ஆற்றுவதற்கு உதவுகிறது.

செட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமானது இந்த தேங்காய்ப்பால் குணுக்கு. இதனை பால் பனியாரம் என்று கூறுவார்கள். இந்த குணுக்கு வகைகளில் காரம், இனிப்பு என்று விதவிதமாக செய்வார்கள். இதனை காலை உணவாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

இதில் உள்ள தேங்காய்ப்பால் உடல் உஷ்ணத்தை குறைத்து வயிற்றில் உள்ள புண்களை ஆற்றுவதற்கு உதவுகிறது. மேலும் உளுந்து உடலுக்கு தேவையான வலிமையை கொடுக்கிறது. எனவே அனைத்து வயதினரும் இதனை உண்ணலாம்.

தேவையான பொருட்கள்:

தேங்காய்- 1

உளுந்து- 100

நாட்டு சர்க்கரை- 100

அரிசி- 2 ஸ்பூன்

எண்ணெய்- பொறிப்பதற்கு

ஏலக்காய்- ஒரு சிட்டிகை

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு (தண்ணீர் அதிகம் சேர்க்காமல்) அரைக்க வேண்டும். அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகைஉப்பு சேர்த்து நன்றாக கலந்து 2 மணிநேரம் அப்படியே மூடி வைக்க வேண்டும்.

அதற்குள் தேங்காயை துருவி தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால், அதனுடன் பால் வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளலாம். ஏலக்காய் தூள், ருசிகேற்ப நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து ஒரு கப்பில் போட்டு அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும். தித்திப்பான தேங்காய் பால் குணுக்கு தயார்.

 

Tags:    

Similar News